கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட பிரதேச செயலகப் பிரிவில் 20 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.தற்போதைய நிலையில் 900 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள், அதேபோன்று பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து குழுவொன்றை அமைத்து வைரஸ் மேலும் பரவாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.