28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கண்டி-ஹந்தானையில் கவனயீர்ப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டி, ஹந்தானையில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹந்தானை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளமாக வழங்குமாறு வலியுறுத்தி குறித்த நிறுவனத்திற்கு எதிராக அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்;ப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காலை 8.30 முதல் 10.30 வரை தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தொழிலாளர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles