கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை கண்காணித்து வழிநடத்தும் நோக்கத்திற்காக தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தை 2027 வரை பராமரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கையொப்பத்துடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்ட முகாமைத்துவ பிரிவு தேவையில்லை எனவும், 2027ஆம் ஆண்டு வரை வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமாயின், வருடாந்தம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.