கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

0
18

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் கனமழையால் நீரில் மூழ்கியுள்ளது.

தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்களும் கிண்ணியா சூரங்கல் பகுதியை அண்டிய பல ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது . தற்போது நிலத்தை பதப்படுத்தி நெற் செய்கைக்காக விதைத்து ஓரிரு நாட்களின் பின்பே கனமழை காரணமாக நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது இதனால் மீண்டும் விதைக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.