கப்பல் கவிழ்ந்ததில் ஒருவர் பலி-12 பேர் மாயம்

0
110

கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல், லெஸ்போஸ் தீவு அருகே சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதுடன் கடும் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்ததில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். ஒருவர் உயிரிழந்திருப்பினும் எந்நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.மாயமான 12 பேரையும் தேடும் பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றனர். கப்பல் கவிழ்ந்ததில் கப்பலிலிருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.