28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கம்பியால் தாக்கிய கணவனை கண்களில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் குத்தி கொன்ற மனைவி

வெல்லவ பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கிய கணவரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட மனைவி கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் வெல்லவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தல்விட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய எஸ். பிரதீப் குமார எனவும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய ஆடை தொழிற்சாலை ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் உயிரிழந்த நபர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles