களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெலும் முதன்நாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டார்.