களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மரநடுகை

0
282

சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வும் சஞ்சிகைவெளியீடும் இன்று காலை நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதும் மியோவாக்கி காடு வளர்ப்பு தொடர்பானவிடயங்களை உள்ளடக்கியதுமான சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

மியோவாக்கி காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொண்டு வரும் பசுமை கழகங்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்க்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்றதுடன் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் கலந்து கொண்டார்.