கழிவுகள் அடங்கிய பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக, தென்கொரியா குற்றச்சாட்டு!

0
71

கழிவுகள் அடங்கிய சுமார் 260 பலூன்களை தமது நாட்டிற்கு வடகொரியா அனுப்பியுள்ளதாக, தென்கொரிய குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் தென்கொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தென்கொரியா அறிவித்துள்ளது.
அத்தடன் பலூன்களுடன் பொருத்த்பட்டுள்ள குறித்த கழிவுப் பொருட்பொதிகளை தொடுவதைத் தவிர்க்குமாறும் தென்கொரியா தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தென்கொரியாவின் 9 மாகாணங்களில் 8 மாகாணங்களில் கழிவுப் பொருட்கள் இணைக்கப்பட்ட பலூன்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் துண்டுப்பிரசரங்களை வடகொரியா மற்றும் தென்கொரியா இவ்வாறு பலூன்கள் மூலம் அனுப்பியதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்பதுடன் தற்போது அவ்வாறான யுக்தியை வட கொரியா மேற்கொண்டுள்ளதா என தென்கொரியா ஆராய்ந்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச சட்ட விதிகளை வடகொரிய மீறியுள்ளதாகவும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று 2016 இலும் வடகொரிய கழிவுகளை பலூன்களி மூலம் தென்கொரியாவுக்கு அனுப்பிய ச்பவம் பதிவானதுடன் கடந்த 2020 இல் தென்கொரிய நாடாளுமன்றத்தில் இவ்வாறான நடவடிக்கை குற்றமாகும் என இது தொடர்பில் சட்டம் கொண்டவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.