காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

0
99

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 25 அடியாலும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 23 அடிகளாலும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் வேகமாகக் குறைந்துள்ள போதிலும், தினசரி நீர் மின் உற்பத்திக்கு தற்போது எந்தத் தடையும் இல்லை என நீர்மின் நிலையப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.