காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது.
காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
வைத்தியசாலைகளில் மருந்துகள் , உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் பற்றாக்குறையினால் 7,700 குழந்தைகள் அத்தியாவசிய வைத்திய உதவியைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.