காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்தநிலையில், நேற்றும் காசாவில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளதால் அங்கு தாக்குதல்களை நடத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தபோதிலும் இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரபா நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.