மட்டக்களப்பு காத்தான்குடி பெரிய மௌலான பள்ளிவாயலினால் மாணவர்களுக்கான சுய கற்றல் நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.ஆண் மாணவர்களின் கல்வி நடவடிக்களை மேம்படுத்தும் நடவடிக்கைளில் ஒன்றாக காத்தான்குடி பெரிய மௌலான பள்ளிவாயல் நிருவாகம் திறமை வாய்ந்த ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்கள் சுயமாக கற்கின்ற நிலையமொன்றை பள்ளிவாயலின் மேல் மாடியில் ஆரம்பித்துள்ளது.
மாணவர்களின் கல்வி, ஆன்மிகம், உளவியல் விருத்தி, ஆளுமை விருத்தி, நூலகப்பயன்பாடு, வாசிப்பு திறன் வளர்த்தல் என பல்வேறு திட்டங்களை நோக்கமாக கொண்டு பல்வேறு கல்வியலாளர்களின் உதவியுடன் இவ் சுயகற்றல் நிலையம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் இத்திட்டம் கிழமை நாட்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளதுடன் 10,11 தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வு பள்ளிவாயலின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான அக்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார், காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.அப்துல் கபூர், பிஸ்மி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.பி.அக்ரம் நழீமி ஆகியோர் உரையாற்றினர்.