கார் விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது

0
194
கொகுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த காருடன் முச்சக்கரவண்டி மோதியதில் நேற்று விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் ஒரு பெண், தாய் மற்றும் அவரது குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், தாயும் மற்றுமொரு பெண்ணும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.