காலாவதியான ஆயுதங்களை அழிக்க முற்பட்டதும் விபரீதம்!

0
14

காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்க​வென இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் நேற்று முன்தினம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின், கருத் மாவட்டத்திலுள்ள சாகரா கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் நீண்ட காலமாக சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த வெடிபொருட்களை அழிக்கும் பணியில் இராணுவ வீரா்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பொருட்கள் இரண்டுமுறை வெடித்துச் சிதறியுள்ளன. இச்சம்பவத்தில் 09 பொதுமக்களும், நான்கு இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் வெடிபொருள் அழிப்பு நடவடிக்கையின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.