28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு மற்றுமொரு கலைஞரும் ஆதரவு!

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மக்களின் போராட்டத்திற்கு இலங்கை கலைஞரான ஜக்சன் அந்தோனி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முழுவதிலும் ஒரு கலைஞன் என்ற வகையில் நடுநிலை வகித்து வந்ததாகவும். எனினும் இன்றைய தினம் மக்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles