கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால், காலிமுகத்திடல் போராட்ட பூமியில் அமைக்கப்பட்டிருந்த நூலகம், நேற்று இரவு அங்கிருந்து அப்புறப்படுத்தப்டப்டுள்ளது.
ஆட்சி மாற்றமொன்றை கோரி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் 115 நாட்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டபூமியில் நூலகம், சட்ட ஆலோசனை மய்யம், ஊடக நிலையம்,
உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள் என பல்வேறு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறியபோது சில நிலையங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தன.
நூலகமானது நேற்று இரவே அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நூல்களை போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 09 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின்போது போராட்டபூமியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள், நிலையங்களுக்க தீ வைக்கப்பட்டது. இதன்போது நூலகமும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெறுமதிவாய்ந்த நூல்கள் இந்த நூலககத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.