நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால், இன்றைய தினம், பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியும் முன்னெடுக்கப்படுகிறது.
இதேநேரம், இன்று கொள்ளுப்பிட்டியிருந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.