28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காலி போராட்டத்தில் முன்னணியாக செயற்பட்ட ரெட்டாவுக்கு பிணை!

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கொம்பனித் தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன் போது அவருக்கு ஆதரவாக ஏராளமான சட்டத்தரணிகள் முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து ரெட்டாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டிருந்தார். அதன் பிரகாரம் நேற்று மாலை ரெட்டா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles