கிணற்றில் வீழ்ந்து முதியவர் உயிரிழப்பு

0
143

யாழ்ப்பாணம் – செல்வபுரம் பகுதியில் கிணறொன்றுக்குள் வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் 11ஆம் திகதி மதியம் முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்று(12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
65 வயது முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.