மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிண்ணையடி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தில் காலை சுப மூகூர்த்த நேரத்தில் பாற்குடபவணி இடம்பெற்று சங்காபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற எண்ணெய் காப்பு சார்த்தும் நிகழ்வினை தொடர்ந்து கும்பாபிசேகம் நடைபெற்றது.
கறுவாக்கேணி ஸ்ரீ ஆலகண்டி சிவன் ஆலயத்தில் இருந்து நேர்த்தி கடன் செலுத்தும் முகமாக பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
அடியவர்களினால் எடுத்துவரப்பட்ட பால் ஸ்ரீதேவி, பூதேவி,சமேதமாக விஷ்ணுவிற்கும் பிள்ளையார்,கருடன்,பலிபீடம்,நவக்கிரகம்,வைரவர், மற்றும் ஆஞ்சநேயர்,ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு ஊற்றப்பட்டு கிரியைகள் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெற்று திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
திருவிழாக்கள் ஆலயத் தலைவர் செ.செல்வராசா, ஆலயகுரு சிவஸ்ரீ க.ஜெயசீலன குருக்கள் உட்;பட கும்பாபிஷேக பிரதமகுரு வேதாகம குருமணி கிரியாஜோதி சிவஸ்ரீ சண்முக மயூரவதன குருக்கள் தலைமையிலான குருமார்களினால் நடாத்தப்படுகிறது.