27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிராமங்கள் தன்னிறைவு பெறுவதை உறுதிப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பு -பிரதமர் தெரிவிப்பு

பயிர்ச்செய்கை மற்றும் உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாடளாவிய ரீதியில் கிராமங்கள் தன்னிறைவு பெறுவதை உறுதிப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

உணவு உற்பத்திக்காக பயிர் செய்கைக்கு முன்னுரிமை அளிப்பதிலும், தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டத்தை செயற்படுத்துவதிலும் பெரும் சவாலாக உள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொலைதூர பிரதேசங்களில் குடிநீரை அணுக முடியாத உள்ளுர் அதிகாரிகளுக்கு அரசாங்கம் தண்ணீர் தாங்கிகளை வழங்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களின் கீழ் தான் நீர் வழங்கல் அமைச்சராக கடமையாற்றியதா கவும், எனவே வடகிழக்கு மாகாணத்தின் நீர் தொடர்பான பிரச்சினைகளை அறிந்துள்ளதாகவும், நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் சவால்களை வெற்றிகொள்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை வகுக்க தயாராக இருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles