கிரிக்கெட் பந்தால் பறிபோன சிறுவனின் உயிர்!

0
112
கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் ஒருவரின் அந்தரங்கப் பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக குறித்த சிறுவனை நோக்கி அடித்துள்ளார்.இதில் ஷௌர்யாவின் அந்தரங்கப் பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.