கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் இணைந்து, நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், எம். வேலுகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் கல்யாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான் பொன் பாலசுந்தரம் பிள்ளை, வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கிளிநொச்சி வணிகர் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியில் இசைப்போட்டியில் பங்குபற்றிய மலையக சிறுமி அசானி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கிளிநொச்சி வர்த்தகர்களால் பணப்பரிசும் வழங்கப்பட்டது.