கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

0
85

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவும், ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடியினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் விட்டு சந்தேகநபர் தப்பி சென்றுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து வீதியல் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவனவும் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.