ஏ-9 வீதி கிளிநொச்சி – இயக்கச்சி சந்திப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்த கொசுகு பேருந்து ஒன்று வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
வீதியில் நடந்து சென்ற குறித்த நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்ததாகவும், இதன்போது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு கூறி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது குறித்த நபர் தடக்கி விழுந்த நிலையில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.