கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கட்டைக்காடு தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்கம் அதிகரித்துள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வைரஸ் நோயான இந்த நோய் வெப்பமான காலநிலையின் போது கால்நடைக்கு பரவி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் மு.கஜரஞ்சனிடம் இத தொடர்பில் நாம் வினவினோம்.
குறித்த நோய்க்கான தடுப்பூசியை கால்நடை வளர்ப்பாளர்கள் பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பணம் செலுத்த வேண்டியுள்ளதால் பண்ணையாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர் கூறினார்.