கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட கோணாவில் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறைய தொடர்ந்து காணப்படுவதால், மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து, ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்களும், பொற்றோரும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற தெற்கு கல்வி வலய பணிமனையின் அதிகாரிகள், பாடசாலைக்கு தரப்பட்ட ஆசிரியர்கள் வருகை தராத பட்சத்தில், தெற்கு கல்வி வலய பணிமனையிலிருந்து அதிகாரிகள் வருகை தந்து ஆசிரியர் இல்லாத வெற்றிடங்களை நிரப்பி, மாணவர்களுக்கு கல்வி வழங்க முடியும் என கடிதம் மூலமாக உறுதிமொழி வழங்கியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.