அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ் இளைஞர்சேனையினரால் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் அநாதரவாக இருக்கும் யாசகர்களுக்கு தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டுவருகின்றது.

தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை தமிழ் இளைஞர்சேனையினர், இப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு வேண்டிய பகல், இரவு உணவுகளை தயாரித்து தொடர்ச்சியாக வழங்கிவருகின்றனர்.

தமிழ் இளைஞர்சேனையின் தலைவர் சங்கீத் தலைமையிலான இளைஞர் குழுவினர் பிரதேசத்திலுள்ள யாசகர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மனிதாபிமானப் பணியில் ஈடுபடவிரும்புபவர்கள் தமிழ் இளைஞர்சேனையோடு சேர்ந்து இயங்குவதற்க்கு முன்வரவேண்டும் என இளைஞர்சேனையின் தலைவர் சங்கீத் கேட்டுக்கொண்டார்.