கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

0
210

கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில், மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கையை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு இன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் நடைபெற்றது.


செயலமர்வினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மற்றும் மனித எழுச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் காணி தொடர்பிலான பல்வேறு விளக்கவுரைகள் வளவாளர்களால் வழங்கப்பட்டு, கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டன.


செயலமர்வின் ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் பதிவு இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட காணி பிரச்சினை தொடர்பில் வரப்புயர என்ற பெயரில் காணொளி ஒன்று
காண்பிக்கப்பட்டது.


காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் மக்கள் நில ஆணையக் குழு தயாரித்த கொள்கைப் பரிந்துரையின் அறிமுகம் குறித்து மக்களின் காணி ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்துன் துடுகல கருத்துரைகளை முன்வைத்தார்.


மக்களின் காணிக் கொள்கையின் பரிந்துரையை எவ்வாறு முன்வைத்தல் என்பது தொடர்பில், மக்கள் காணி ஆணைக்குழு ஆணையாளர்களான சட்டத்தரணி ஏர்மீசா டீக்கல மற்றும் தோட்ட மக்களின் உரிமை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கணேசலிங்கம் கணேஸ் விரிவாக விளக்கவுரைகளை வழங்கினர்.


இச்செயலமர்வில் பல்லின அரசியல் பிரதிநிதிகளுடன் கருத்துக்கள் மக்களின் காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும்
கிழக்கு மாகாணத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் காணி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணுதல் என்பனவும் இடம்பெற்றன.