கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

0
55

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம், இன்று, கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து, காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று, காலை 10.00 மணிக்கு, வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பதினைந்து தினங்களைக் கொண்ட மகோற்சவத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி இரவு பெரிய சப்பறத் திருவிழாவும், 26 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், அன்றிரவு சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளும் இடம்பெற்று, மறுநாள் 27 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.