இன்று முதல் நாளை மறுதினம் வரை வழக்கமான கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு நாள் கடவுசீட்டு சேவையின் கீழ் வழங்கப்படும் 24 மணி நேர சேவை இந்தக் காலகட்டத்தில் செயல்பாட்டில் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.