குரங்குகளை ஏற்றுமதி செய்தல்: விலங்கு உரிமைகள் சட்டங்கள் நிலை நாட்டப்பட வேண்டும்

0
93
குரங்குகளை ஏற்றுமதி செய்யும்போது விலங்குகள் சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“விலங்குகள் தொடர்பான உரிமைகள் உரிய சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என சரத் பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.உணவுக்காக விலங்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும், சீனாவில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் இலங்கையில் இருந்து குரங்குகளை விரும்புகிறதா என்பதை சீனத் தூதுவர் கண்டறிய வேண்டும் என்றார்.
அதேநேரம் குரங்குகள் போன்ற விலங்குகளும் மயில் போன்ற பறவைகளும் உணவுப் பயிர்களை நாசம் செய்வதாகவும் தெரிவித்தார்.“தற்போதைய வனவிலங்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நான் ஏற்கனவே பேசி, நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.