29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் வாசிப்புப் போட்டி இடம்பெற்றது

மட்டக்களப்பு குருக்கள் மடம் கலைவாணி வாசகர் வட்டம் தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு பிரதேச மாணவர்களுக்கு இடையில் நடாத்திய வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் வைபவம் வாசகர் வட்டத்தலைவர் விவேகானந்தம் தலைமையில் குருக்கள்மடம் பொதுநூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன், சிரேஸ்ட விரிவுரையாளர் ஞானரெத்தினம், பிரதேச சபை செயலாளர் அறிவழகன், சனசமுக உத்தியோகத்தர் குகநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் வருடம் அறிவதர்ந்த சமுகத்திற்கான வாசிப்பு எனும் தொனிப்பொருளில் தேசியவாசிப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்றுவகின்றன. இங்கு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் நூலக நிர்வாகி ஜெயசித்திரா அதிதிகளால் கௌரவிக்கப்ட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles