குருநாகல் போதனா வைத்தியசாலையில் மரணங்கள்!

0
110

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக வைத்திய பிரிவுக்குள் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதால் 5 நோயாளிகள் வரை உயிரிழந்தள்ளதாகவும், இதனால் தற்காலிகமாக அப்பிரிவினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாததினால் சுகாதார அமைச்சு இதுகுறித்த விசாணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வாரத்தில் இரத்த மாற்றத்துக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் இரத்த மாற்றத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரத்தம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய இரசாயனங்களின் தாக்கத்தினாலும் இரத்தமேற்றப்பட்ட போது இரத்தின் அளவு குறைவடைந்ததினாலும் இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை இரசாயன பரிசோதனை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான ஆய்வுகளுக்காக சுகாதார அதிகாரிகள் குழுவொன்று குருநாகல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.