குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் நாடாளுமன்றின் அங்குரார்ப்பண கூட்டம்

0
82

எதிர்காலத்தில் நாட்டுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று பழைய நாடாளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர் நாடாளுமன்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடாளுமன்ற வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு பிரதம அதிதிகளுக்கு மலியதேவ வித்தியாலயத்தினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைப் நாடளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுச் சேவை முகாமையாளர் புத்தினி ராமநாயக்க, தொடர்பாடல் திணைக்களத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி துமிந்த விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல மற்றும் குருநாகல் மலியதேவ வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.