அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக
முன்வைக்கப்பட்டுள்ள 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
குறைநிரப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அரச நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.