காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று காரைதீவு சபா மண்டபத்தில் பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கடந்த வாரம் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் 39 வது சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் தவறுவதலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டி தொடர்பாக கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஐந்து உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்கள் நடுநிலையாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தனர். தொடர்ந்தும் அது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் போன்றரிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டிருந்தோம் எனவே அப்பிரேரணை தேல்வியில் முடிவடைந்ததாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என சுட்டிக்காட்டினார்
மேலும், சபைக்கு ஆளுமையான சிலரை மக்கள் தெரிவு செய்திருந்தாலும் ஆறுதல் பரிசில் வந்த சிலர் விளம்பர அரசியலையே செய்துகொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பிரதேச சபை எல்லைக்குள் வழங்கப்பட வேண்டிய மின் இணைப்புக்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.