கம்பஹா அஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் துல்கின் அனுராத நவரத்ன என்ற 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரும் கொலை செய்தவரும் நண்பர்கள் எனவும், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார், கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் நபர் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்வத்தில், கம்பஹா, பொக்குண வீதி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.