மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைபிரிவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி .பண்டார தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினர் மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு புதுநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா பொதிகளும் மற்றும் 2350 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க முன்னெடுக்கும் நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.