கொரோனாவை ஒழிக்க அரசாங்கத்திடம் சரியான முகாமைத்தும் இல்லை- மரிக்கார் எம்.பி.

0
256

கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது. இதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லாததால்தான் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொழும்பு நகரில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே உயிரிழக்கின்றனர். ஆனால் மரணச் சான்றிதழில் கொரோனா என்றே எழுதப்படுகிறது. அது சுகாதார அமைச்சின் ஆவணத்தில் பதிவாவதில்லை. இதன் பின்னர் நாட்டின் மரணவீதம் குறைவு என அறிக்கை விடுகின்றனர்.

இதனால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லை என்று நாம் கூறிவருகின்றோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை என்றனர்.

நிறைவேற்று அதிகாரம் தேவை என்றனர். அத்தனையும் வழங்கினாலும், அரச பணியாற்றத் தெரியாது என்றால் அதனை மேற்கொள்ள முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.ஆரம்பத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியபோது வெளிநாடுகளை உதாரணம் காட்டினர்.

நாங்கள் செய்ததை யாரும் பேசுவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இரண்டாவது அலை வந்தபோது, யுத்தத்தைக் கட்டுப்படுத்தியதுபோன்று வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டார் எனத் தெரிவித்தார்.