கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வேலைத்திட்டம்

0
199

களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை கண்காணித்துவிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் இல்லாவிடினும் 60 வயதிற்கு மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.