நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 293 பேர் குணமடைந்தனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதில் 4 ஆயிரத்து 814 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 458 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவக் கண்காணிப்பிலுள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 50 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.