சீனாவில், தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை, 37 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சீனாவின் மக்கள் தொகை, சுமார் 140 கோடியாக உள்ள நிலையில், நிலைமை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவின் கொரோனா அலை தொடர்பில், பிரித்தானியாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், சீன அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான புள்ளிவிவர தகவல்படி, ஒரு நாளில், சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. இவ்வாறானா நிலையில், இந்த மாதம் மட்டும், கொரோனா தொற்று காரணமாக, 10 பேர் உயிரிழந்திருப்பதாக, சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.