கொழும்பில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

0
271

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என கொழும்பு மாநகர சபை பிரதான சுகாதார மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட 400 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் நூற்றுக்கு 5 வீதமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 30 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றுடன் இருக்கலாம்.

எனினும் இந்தத் தொற்றாளர்களிடமிருந்து தொற்றுப் பரவுகின்றதா? அல்லது உடலிலே உள்ளதா? என்பதைத் தீர்மானிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.