கொழும்பில் 5 வயதிற்குட்பட்ட 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு

0
214

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9 ஆயிரத்து 300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பற்றாக்குறையால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு படிப்படியாக உருவாகும் எனவும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது குழந்தைகளில் வளர்ச்சி குறைபாட்டை ஏற்படுத்தும் எனவும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. போசாக்கு நிலையை குறைப்பதற்காக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு போசாக்கு பைகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.