28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.செங்கடலில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் குமார தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான முனையங்களில் மாத்திரம் கடந்த 29 நாட்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles