கொழும்பு துறைமுகப் பகுதியில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு!

0
61

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு இளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பது சிறப்பு எனத் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

இந்தப் புதைகுழி வழக்கமான புதைகுழி அல்ல என்றும் உடல்கள் புதைக்கப்பட்ட விதம் அவை கொலை செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்றும் பேராசிரியர் கூறினார். இந்த நிகழ்வுகளுக்கான காலப்பகுதியை விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அறிக்கைகள் வழங்கப்படும் என்றும் ராஜ் சோமதேவா கூறினார். இதுவரை 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக, கணிசமான எண்ணிக்கையிலான உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் மூன்று பேரின் எலும்புக்கூடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒரு சிறு குழந்தையின் கையில் செம்பு கலந்த ஏதோ ஒன்றால் கறை ஏற்பட்டதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க மற்றும் துறைமுக காவல்துறையின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ். ஜயரத்ன அவர்களும் கலந்து கொண்டனர். கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிக்குப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமை தாங்குகிறார்.