வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கேமராக்களை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கொழும்பு மத்திய தபால் நிலையத்தின் அலுவலக உதவியாளருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது .இந்த தீர்ப்பை வழங்கும் போது பிரதிவாதிக்கு 31,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 சி.சி.டி.வி கேமரா பெட்டிகளை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த பிரதிவாதிக்கு எதிராக 2016 செப்டம்பர் 19 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிக்கு எதிராக அரசு தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.அதன்படி பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.