கொழும்பு – முகத்துவாரம் – லெல்லம மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சிறிய மீன்பிடி படகுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு படகு இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் முகத்துவாரம் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.